ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது 'ஆனை கட்டி போரடிக்கிற...' கதைதான். அப்படியே படத்தை எடுத்து விட்டாலும் அதை வியாபாரம் செய்வது என்பது இன்றைய சூழலில் சாதாரண விசயமல்ல. அதனால் பெரும்பாலான பட்ஜெட் பட அதிபர்கள் அனைவருமே தாங்களே படத்தை தியேட்டர்களில் வெளியிட்டு நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில்தான், தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி உள்ளிட்ட சில டைரக்டர்களும், தனுஷ், விஷால், ஆர்யா உள்ளிட்ட சில நடிகர்களும் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி படங்கள் தயரித்து வருகின்றனர். இவர்களையெல்லாம் பார்த்துதான் பிரசன்னா-சினேகா தம்பதியினரும் ஒரு பட நிறுவனம் தொடங்கினார்கள்.
அந்த படங்களில் ஒன்றில் பிரசன்னாவே நாயகனாக நடித்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய இரண்டொரு நாட்களோடு, அந்த படத்தை நிறுத்தி விட்டார்களாம். இதுவரை மற்றவர்கள் தயாரிக்கும் படங்களில் பணத்தை வாங்கிக்கொண்டு நடித்து வந்த சினேகா-பிரசன்னா இருவரும், கையிலிருந்து பணத்தை கொடுத்து படமெடுப்பதில் இருக்கிற கஷ்டங்களை அப்போதுதான் கண்கூடாக பார்த்தார்களாம். ஒவ்வொரு நாளும் ஆன செலவு தலைசுற்றிப்போனதாம்.
அதனால் படப்பிடிப்பை அதிரடியாக தொடங்கியவர்கள் இரண்டொரு நாட்களோடு நிறுத்தி விட்டார்களாம். அடுத்து படப்பிடிப்பை எப்போது தொடருவார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறதாம்.