ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விபச்சார வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நடிகை ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஹன்சல் மேத்தா குரல் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த 'ஷாகித்' என்ற ஹிந்திப் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றவர் இவர்.
அவருடைய டுவிட்டர் தளத்தில் “ஸ்வேதாவின் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். அவருடைய அந்த பணக்கார வாடிக்கையாளர்களையும், அவருடைய தரகரின் புகைப்படங்களையும் வெளியிடுங்கள். என்னுடைய அடுத்த படத்தில் ஸ்வேதாவுக்கு நடிக்க ஒரு வாய்ப்புக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவர் 'மாக்தீ' படத்தில் மிகவும் நன்றாக நடித்த நடிகை,” என்று கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, ஒரு சில இந்தி நட்சத்திரங்களும் ஸ்வேதாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார்கள். “ஒரு பெண் விபச்சாரத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனால் அவருடைய பணக்கார வாடிக்கையாளர்களைப் பற்றி ஏன் வெளியிடவில்லை,” என நடிகை அதிதி கூறியிருக்கிறார்.
உபேன் என்ற நடிகர் கூறியிருப்பதாவது, “ஸ்வேதாவின் நிலமையைப் பார்த்து மனம் உடைந்துவிட்டேன். அவர் சின்னப் பெண்ணாக இருந்த போது சந்தித்துள்ளேன். சிறந்த நடிகை, அவர் மீண்டும் வந்து நடிப்பில் சாதிப்பார் என நம்புகிறேன்,” என்று கூறியிருக்கிறார்.