Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிக சம்பளம் வாங்கும் முதல் அம்மா நடிகை சரண்யா!

06 செப், 2014 - 08:15 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அம்மா நடிகையாக வலம் வந்தவர் ஆச்சி மனோரமா தான். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற அவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால், அதிகமான படங்களில நடிப்பதை குறைத்து விட்டார்.

இந்த நிலையில், அவரது இடத்தை நிரப்ப சரியான அம்மா நடிகை இல்லாமல் இருந்த நேரம் சரண்யா களமிறங்கினார். 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் அதையடுத்து மனசுக்குள் மத்தாப்பு, சீவலப்பேரி பாண்டி, பசும்பொன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், ஒரு கட்டத்தில் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.


ஆனால், 1995க்கு பிறகு 8 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், 2003க்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிரவேசித்தார். முதலில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர், பின்னர் யூத் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த களவாணி, முத்துக்கு முத்தாக, நீர்ப்பறவை, ஒரு கல் ஒரு கண்ணாடி, தென்மேற்கு பருவக்காற்று, எம்டன் மகன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தன.


இதில் சீனுராமசாமி இயக்கத்த்தில் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படம் சரண்யாவுக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு சரண்யாவின் மார்க்கெட் சற்று டவுனானபோதும் இப்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. பல மாஜி ஹீரோயின்கள் அம்மா வேடங்களுக்காக பிரவேசம் செய்தபோதும் சரண்யா போன்று அவர்களால் சைன் பண்ண முடியவில்லை. அதனால் இப்போதைக்கு ஒரே அம்மா நடிகை சரண்யாதான் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.


இதனால் அவரது சம்பளமும் படத்துக்குப்படம் எகிறிக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு படத்துக்கு ரூ. 15 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம் சரண்யா. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த அம்மா நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in