ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இப்போது எல்லா நடிகர்களுமே திகில் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அருள்நிதியும் நடிக்க இருக்கிறார். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் அஜய் இயக்க இருக்கும் திகில் படத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து அஜய் கூறியிருப்பதாவது: நான் ஏ.ஆர்.முருதாஸ் சாரிடம் துப்பாக்கி படம் வரை உதவி இயக்குனராக பணியாற்றினேன். நான் தயார் செய்திருந்த திகில் கதைக்கு அருள்நிதிதான் பொருத்தமானவர் என்று அவரிடம் கதை சொன்னேன். நடிக்க ஒப்புக் கொண்டார். துப்பாக்கி படத்தில் கேமரா மேன் சந்தோஷ் சிவனிடம் பணியாற்றிய உதவியாளரும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் உதவியாளரும் இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றுகிறார்கள். ஹீரோயின் மற்றும் இசை அமைப்பாளர் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. வெளிநாட்டு நடிகர், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றுகிறார்கள். அக்டோர் முதல் வாரத்திருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார் அஜய்.