ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத், நீயா நானா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த மாதம் 17ந் தேதி ஒளிபரப்பான எபிசோட்டில் டாக்டர்கள் எடுக்கச் சொல்லும் மருத்துவ டெஸ்டுகள் தேவையா? இல்லையா? என்ற விவாதம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஒரு பிரிவாகவும், டாக்டர்கள் ஒரு பிரிவாகவும் வாதிட்டார்கள்.
நோயாளிகளிடம் பணம் பறிப்பதற்காக தேவையற்ற டெஸ்டுகளை டாக்டர்கள் எடுக்கச் சொல்கிறார்கள் என்று பொதுமக்கள் கூறினார்கள். இதனை டாக்டர்கள் மறுத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக டாக்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாக்டர்கள் இணைய தளங்களில் கோபிநாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஏதோ ஒரு சில இடங்களில் ஒரு சில டாக்டர்கள் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்த டாக்டர் சமுதாயத்தையும் கோபிநாத் குற்றம் சொல்கிறார். நிகழ்ச்சிக்கு டாக்டர்களை அழைத்து சென்று பொதுமக்கள் முன்னிலையில் அவர்களை அவமானப்படுத்தி விட்டார். அவருக்கு எந்த டாக்டரும் வைத்தியம் செய்யக்கூடாது. என்பது மாதிரி நிறைய கண்டனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றது.
அதே நேரத்தில் பொதுமக்கள் மத்தியிலிருந்து நிகழ்ச்சிக்கு பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கிறது. மருத்துவம் கோடிகளை கொட்டும் வியாபாரமாகி விட்டது என்பதை நிகழ்ச்சி தோலுரித்து காட்டியது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.