ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர்களின் சம்பளங்கள் உயர்கிறது என்ற உடனே தமிழ் நட்சத்திரங்களைப் போல் ஏதோ பல கோடி ரூபாய் உயர்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அந்த உயர்வு என்பது வெறும் சில லட்சங்களில்தான். மம்முட்டி, மோகன்லால், திலீப் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சம்பளம் மட்டும்தான் சில கோடிகளில், அதுவும் மூன்று, நான்கு கோடிகள் மட்டும்தான், அல்லது அதற்கும் கீழ்தான். நம்ம ஊர் நட்சத்திரங்களின் சம்பளங்கள் மலையாள நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட பத்து மடங்கு அதிகம். அதிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சம்பளத்தையெல்லாம் கணக்கில் சேர்க்கக் கூடாது.
மலையாளத்தில் இன்றைய இளம் நட்சத்திரங்களில் சிலர் அவர்களது சம்பளத்தை கொஞ்சமே கொஞ்சம் உயர்த்தியிருக்கிறார்களாம். ஆனால் அதற்கே அவர்கள் சம்பளத்தை உயர்த்திவிட்டார்கள் என மலையாள மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றன. அப்படியென்றால் நமது ஹீரோக்களின் சம்பளத்தைப் பற்றி என்ன சொல்வார்கள். மலையாள நடிகர் பிருத்விராஜ் சம்பளமாக ஒரு கோடியும், ஃபகத் பாசில், துல்கர் சல்மான் 70 லட்சமும், 'நேரம்' படத்தில் நடித்த நிவின் பாலி 50 லட்சமும் சம்பளம் கேட்கிறார்களாம். இதற்கே அவர்களது சம்பளத்தை கூரையை விட மேலாக உயர்த்திவிட்டார்கள் என மலையாளப் பத்திரிகைகள் செய்தி வெளியிடுகிறார்கள்.
நம் ஊரில் முன்னணி இளம் ஹீரோக்கள் சராசரியாக படத்திற்கு 15 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை வாங்குவதாகப் பேச்சு நிலவி வருகிறது. அந்தப் பணத்தில் மலையாளத்தில் ஒரு பத்து படத்தை எடுத்து விடுவார்கள். ஆனால், அதே மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்தால் வாங்கும் சம்பளம் அங்கு வாங்குவதை விட அதிகமாகவே இருக்கிறதாம். விலைவாசி ஊருக்கு ஊரு வித்தியாசமாக தானே இருக்கு...