ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அபிநயா. தற்போது மலையாளம், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பூஜை, ரோமியோ ஜூலியட் உள்பட சில தமிழ் படங்களிலும் நடிக்கிறார். இதுதவிர அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிக்கும் போல்பச்சன் இந்திப் படத்திலும் நடிக்கிறார்.
இதற்கு அடுத்த கட்டமாக இந்தியாவில் தயாராகும் பாசிபிலிட்டி இன் டிசாபிலிட்டி (முடியாதவர்களாலும் முடியும்) என்ற ஆங்கில படத்தில் நடிக்கிறார். சர்வதேச படத் தயாரிப்பாளரும் இசை அமைப்பளருமான ரூபம் சர்மா இயக்கி நடிக்கிறார்.
"இந்திய ஆங்கில படத்தில் நடிக்கிறேன். ரொம்ப சவாலான கேரக்டர். என்னை நம்பி நடிக்க வைக்கும் இயக்குனருக்கு நன்றி சொல்கிறேன். மற்ற விபரங்கள் எதையும் இப்போது தெரிவிக்க இயலாது" என்கிறார் அபிநயா.
இந்தப் படம் மாற்று திறனாளிகள் பற்றிய படம். இதில் நிஜமாகவே மாற்றத் திறனாளியான அபிநயா அவரது கேரக்டரிலேயே நடிக்கிறார் என்கிறார்கள். அதாவது காது கேளாத வாய்பேச முடியாத அபிநயா எப்படி ஒரு திரைப்பட நட்சத்திரமாக வளர்ந்தார் என்கிற கதையாம். இந்த படத்திற்கு பிறகு அபிநயாவின் புகழ் உலகம் முழுவதும் பரவும் என்கிறார்கள்.