ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல், விஸ்வரூபம் படம் வெளியான பிறகு அதன் இரண்டாம் பாகத்தில் நடித்தார். அந்த படமே இன்னும் வெளியாகாத நிலையில், உத்தமவில்லனில் நடிக்கத் தொடங்கினார் கமல். ஆனால் இப்போது அந்த படமும் இன்னும் முடிவடையாத நிலையில, த்ருஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடித்துககொண்டிருக்கிறார்.
இதற்கு என்ன காரணம்? என்று விசாரித்தபோது, விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்தபோதும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லையாம். ஏற்கனவே அந்த படத்தை தயாரிக்கும் ஆஸ்கர் பட நிறுவனம் 150 கோடி பட்ஜெட்டில் ஐ படத்தையும் தயாரித்திருப்பதோடு, அப்படத்தை தீபாவளிக்கு வெளியிடும் வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதால், விஸ்வரூப வேலைகள் தற்காலிகமாக பேக் அடித்துள்ளதாம்.
அதோடு, லிங்குசாமி தயாரித்து வந்த உத்தமவில்லன் படப்பிடிப்பு அதிக வேகத்துடன் நடந்து வந்தபோதும், அஞ்சான் படம் கொடுத்த நஷ்டம் காரணமாக, உத்தமவில்லன் படப்பிடிப்புக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டதாம். அதனால்தான் யோசித்துப்பார்த்த கமல், இவர்கள் ரெடியாகி வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்று தனக்காக படப்பிடிப்புக்கு செல்ல காத்துக்கொண்டிருந்த பாபநாசம் படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டாராம்.
ஆக, கமல் நடித்துள்ள விஸ்வரூபம்-2, உத்தமவில்லன், பாபநாசம் இந்த மூன்றில் எந்த படம் முதலில் திரைக்கு வரும் என்பது புதிராக உள்ளது.