ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீப காலமாக எந்த பட விழாக்களில் கலந்து கொண்டாலும், சினிமா உலகின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவரான கேயார். அதோடு, அந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி என்ற தனது கருத்தினையும் சொல்லி வருகிறார்.
அந்த வகையில், நேற்று சென்னையில் நடைபெற்ற மகாபலிபுரம் படத்தின் ஆடியோ விழாவில் கேயார் பேசுகையில், முன்பெல்லாம் படங்களை எடுப்பதுதான் கஷ்டமான வேலையாக இருந்தது. ஆனால், இன்றைக்கோ அது சுலபமாகி விட்டது. ஆனால் தயாரித்த படங்களை வெளியிடுவதுதான் பெரிய சிரமமாக உள்ளது.
குறிப்பாக, பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ படங்கள் என கலந்து தயாராகி வருவதால், அவற்றை சரியான நேரம் பார்த்து வெளியிட வேண்டும். அதாவது, ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்கள் வெளியாகும்போது சிறிய பட்ஜெட்டில் உருவான சிறிய ஹீரோக்களின் படங்களை ரிலீஸ் பண்ணக்கூடாது. காரணம், ரஜினி படம் வந்தால் ரசிகர்கள் எல்லாமே அந்த தியேட்டருக்குத்தான் செல்வார்கள். சிறிய ஹீரோவின் படத்தை கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
அதனால், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகாத நேரமாக பார்த்து சிறிய படங்களை வெளியிட வேண்டும். சமீபத்தில் வெளியான சதுரங்க வேட்டை நல்ல படம் என்றபோதும், ரிலீஸ் செய்த நேரம் சரியானதாக இல்லை என்ற காரணத்தினால் அது எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்று பேசிய கேயார், இந்த ஆண்டில் வெளியான படங்களில் அஜீத்தின் வீரம், தனுஷின் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்கள் மட்டுமே அதிக லாபம் ஈட்டியவை என்றார்.