பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நடிகர் கமலஹாசன் இந்து மதத்தில் பிறந்தவர் என்றாலும், பகுத்தறிவு சிந்தனைவாதி. அதனால் நாத்திகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார், கமல். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கெளதமி நடிக்க மலையாளம் த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார்.
ஆரம்பத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், தூத்துக்குடி பகுதிகளில் நடந்து வந்த பாபநாசம் படப்பிடிப்பு தற்போது நாங்குனேரி பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தில் சில ஆன்மீக காட்சிகளும் உள்ளதாம். அதனால் அதை படமாக்க அங்கு அமைந்துள்ள ஸ்ரீவானமாமலை மடத்தில் உள்ள பெருமாள் கோயில் சரியாக இருக்கு என்று முடிவு செய்தாராம் கமல்.
அதையடுத்து, அந்த மடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு, ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுரை ஜீயரை சந்தித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டாராம். மடாதிபதியும் அனுமதி வழங்கினாராம். 5 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த கமலின் நெற்றியில் பெரிய விபூதி பட்டை போட்டிருந்தாராம்.
நாத்திகவாதி கமல், மடாதிபதியை சந்தித்ததோடு, நெற்றியில் விபூதி அணிந்து வந்ததால், கமல் ஆன்மீகத்துக்கு மாறி விட்டதாக நாங்குநேரி பகுதிகளில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறதாம்.