ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எதையாவது செய்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துகிறவர் டாப்ஸி. ஆனால் அவரோ நான் ரொம்ப நல்ல பொண்ணு, அமைதியான பொண்ணு என்னை வதந்திகளால் வீழ்த்தப் பார்கிறார்கள் என்கிறார். அவர் கூறியிருப்பதாவது: நடிக்க வந்ததில் இருந்தே எனக்கு அப்போ கல்யாணம், இப்போ கல்யாணம்னு வதந்தி பரப்புறாங்க. என்னேட சக்சஸை தாங்கிக் முடியாதவுங்க இப்படி செய்றாங்கன்னு நினைக்கிறேன். நான் படிக்கிற காலத்துலேயே டாட்டு குத்திக்குவேன். அதையும் குறை சொல்றாங்க. அங்க குத்தியிருக்காங்க, இங்க குத்தியிருக்காங்கன்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி குத்தினதை இப்போ கண்டுபிடிச்சு சொல்றாங்க.
தங்கையோட சந்தோஷமாக வெளிநாட்டுக்கு டூர் போனால் டாப்ஸிக்கு வாய்ப்பே இல்லை. அதுதான் வெளிநாட்டில் செட்டிலாகுறார்னு சொல்றாங்க. ஆரம்பம் படத்துலேருந்தே நயன்தாரா எனக்கு திக் பிரண்ட் அடிக்கடி போன்ல பேசிக்குவோம். ஒரே ஊர்ல இருந்தால் மீட் பண்ணிக்குவோம். ஆனா ரெண்டு பேருக்கும் சண்டைன்னு சொல்றாங்க.
ஏன் என்னை பற்றி இத்தனை வதந்திகள்னு எனக்கு புரியவே இல்லை. ஆனால் நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் என் வேலையை நான் பார்த்துக்கிட்டிருக்கேன் என்கிறார் டாப்ஸி.