ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தெலுங்குத் திரையுலகில் மீடியாக்களால் அதிகம் பேசப்படும் ஒரு நபராக மாறியிருக்கிறார் ராம்கோபால் வர்மா. தெலுங்குத் திரையுலகில் ஆரம்பமான அவருடைய திரையுலக வாழ்க்கை 'ரங்கீலா' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தித் திரையுலகில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தது. அதன் பின் வரிசையாக தோல்விப் படங்களையே கொடுத்து வந்தவர், மீண்டும் தெலுங்குப் படங்களை இயக்க வந்துவிட்டார். படங்களை இயக்குவதோடு மட்டும் இருந்துவிடாமல் அடிக்கடி டுவிட்டரில் எதையாவது கருத்துக்களைச் சொல்லி 'உள்ளேன் ஐயா' என்ற விதத்திலேயே பத்திரிகைச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார். அதன் மூலம் அவருக்கும் இலவச பப்ளிசிட்டி கிடைத்து வருகிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஒரு முறை அமிதாப்பிற்கு எதிராக சொல்லக் கூடாத ஒரு வார்த்தையைச் சொன்னேன். அதனால் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அவரைத் தவிர எல்லாருமே ஒரு வேகத்தைக் காட்டினார்கள். நியாயமாகப் பார்த்தால் அவர்தான் அதற்குக் கவலைப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவர் கவலைப்படவில்லை. நான் எதனால் சொன்னேன் என்ற சூழல் அவருக்குத் தெரியும். நான் இப்படித்தான் இருப்பேன்.
நான் விருப்பப்பட்டேதான் இந்தித் திரையுலகில் இருந்து கொஞ்சம் விலகியிருக்கிறேன். வித்தியாசமான படங்களை எடுத்து என்னை புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறேன். அங்கிருந்து வந்ததால் அங்கிருப்பவர்களுடன் எனக்கு எந்த இடைவெளியும் ஏற்படவில்லை. எனக்கு ஒரு போதும் நண்பர்கள் என்று யாருமேயில்லை. நான் நானாக இருக்க விரும்புகிறேன், எனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன். என்னைப் பற்றி யோசித்து நேரத்தை வீணாக்குபவர்களைப் பற்றி நான் யோசித்து என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, ” எனச் சொல்கிறார் ராம்கோபால் வர்மா.