கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
எந்த சினிமா மேடைகளில் தோன்றினாலும், எதிரில் அமர்ந்திருக்கும் ரசிகர்களைப்பார்த்து ஹேய் மச்சான்ஸ் என்றுதான் தனது பேச்சை ஆரம்பிப்பார் நமீதா. அவர் அந்த வார்த்தையை சொன்னதும் தமிழ்நாட்டு மச்சான்ஸ் அனைவரும் புது எனர்ஜி வந்தது போன்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அதையடுத்து, குஷியாக எதையாவது தப்பும் தவறுமாக பேசி விட்டு வந்து இருக்கையில் அமருவார் நமீதா.
ஆனால், இந்த மச்சான்ஸ் விசயத்தை ஒரு விழாவின்போது, வைரமுத்து உள்ளிட்ட சில சீனியர்கள் அமர்ந்திருந்தபோது, எதிரில் இருக்கும் மச்சான்களுக்கும், மேடையில் அமர்ந்திருக்கும் மச்சான்களுக்கும் வணக்கம் என்று பேசத் தொடங்கினார் நமீதா. அதைக்கேட்டு, மேடையில் இருந்த பெருசுகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
இருப்பினும், அந்த இடத்தில் அவரிடம் என்ன சொல்ல முடியும் என்று தலைகவிழ்ந்தபடி அமர்ந்திருந்தனர். அதையடுத்து, தான் செய்த தவறை பற்றி மற்றவர்கள் சொன்னதையடுத்து, சிலகாலம மச்சான்சுக்கு மூடு விழா நடத்தியிருந்த நமீதா. இப்போது மறுபடியும் மச்சான்ஸ் என்று மேடைக்கு மேடை பேச்த் தொடங்கி விட்டார். இப்படி வார்த்தைக்கு வார்த்தை மச்சானையும் கலந்து அவர் பேசுவதால், அதுவரை அமைதியாக நடந்து கொண்டிருககும் விழாவில் நமீதா வாயை திறந்ததும் களைகட்டத் தொடங்கி விடுகிறது. இதனால இதற்காகவே இப்போது சிலர் நமீதாவை விழாக்களுக்கு அழைத்து வருகிறார்கள். அதனால் கவர்ச்சிகரமாக உடையணிந்து மப்பும் மந்தாரமுமாக மேடைகளை அலங்கரித்து வருகிறார் நமீதா.