ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மறுதிரையீடு செய்யப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது. இந்த விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவையொட்டி முதலவர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு:
திரைவானிலும், அரசியல்வானிலும் எவராலும் வெல்லமுடியாத வரலாற்று சாதனை படைத்த மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, வெள்ளிவிழா கொண்டாடி உள்ளது. இந்த செய்தி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டுக்கு பிறகும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல வாடமல் இருக்கிற வாடா மலர் ஆயிரத்தில் ஒருவன்.
இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.