ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தில்லுமுல்லு படத்தை அடுத்து பத்ரி இயக்கியுள்ள படம் ஆடாம ஜெயித்தோமடா. கருணாகரன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அஞ்சாதே விஜயலட்சுமி, ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹா, டைரக்டர். கே.எஸ்.ரவிக்குமார், நரேன், பாலாஜி, சேத்தன், நிப்பு உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்றது.அதையடுத்து அப்படக்குழு மீடியாக்களை சந்தித்தது.
அப்போது இப்படம் பற்றி டைரக்டர் பத்ரி கூறுகையில், கிரிக்கெட் சூதாட்டத்தைப்பற்றி தெள்ளத்தெளிவாக சொல்லும் படம் இது. அதேசமயம், அந்த சீரியசான விசயத்தை காமெடியாக சொல்லியிருக்கிறேன். அதனால்தான் இந்த கதையில் ஒரு காமெடியான நபரை ஹீரோவாக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் கருணாகரனை ஹீரோவாக நடிக்க வைத்தேன்.
அதேபோல் இன்னொரு ஹீரோ போன்ற ரோலில் நேரம், ஜிகர்தண்டா படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவை நடிக்க வைத்திருக்கிறேன். முந்தைய படங்களில் மிரட்டல்களில் இருந்து விலகி இந்த படத்தில் அவர் ஒரு காமெடியான போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். அதோடு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அதனால் படமே ஒரு புதுமையாக கலவையாக வந்திருக்கிறது.
மேலும், நரேன் இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட ரோலில் நடித்திருக்கிறார். அவர் வரும் ஒரு காட்சியில் நெற்றியை விட நீளமாக மூக்கு இருப்பவர்கள் முட்டாளாகத்தான் இருப்பார்கள் என்றொரு டயலாக் வரும். இது நீளமாக மூக்கு இருப்பவர்களை முட்டாள் என்று சொல்வதற்காக எழுதப்பட்ட வசனம் அல்ல. காமெடியாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த கேரக்டரை முன்வைத்தே எழுதப்பட்ட வசனம் என்று கூறிய பத்ரி, இந்த படத்திற்கு நடிகர் சிவா வசனம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து, இது கிரிக்கெட்டை பெருமைப்படுத்தும் படமா? இல்லை கிண்டல் செய்யும் படமா? என்று அவரிடம கேட்டபோது,
பெருமைப்படுத்தவும் இல்லை. கிண்டல் செய்யவும் இல்லை.நடக்கிற விசயங்களை அப்படியே படமாக்கியிருக்கிறோம். மேலும், இந்த படம் அற்புதமாக வந்திருக்கிறது,. நான் பரத் நடிப்பில் தம்பிக்கு இந்த ஊரு என்றொரு படத்தை இயக்கினேன் அது ப்ளாப் ஆனது, அதன்பிறகு ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தை ரீமேக் செய்தேன். அது வெற்றி பெற்றது.
அதேபோல் வெற்றி தோல்வி என்பதெல்லாம் அவ்வப்போது நமக்கு அமைகிற விசயங்களை பொறுத்தது. அந்த வகையில், இந்த ஆடாம ஜெயித்தோமடா கதையும், நடித்திருப்பவர்களும் நான் நினைத்தபடியே அமைந்தார்கள். அதனால் இந்த படத்தின் வெற்றியை இப்போதே என்னால் உறுதிபடுத்த முடிகிறது என்றார்.