ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னடத்தில் உள்ள முக்கிய நடிகைகளில் பூஜா காந்தியும் ஒருவர். இவர் தற்போது அபினேத்ரி என்றொரு படத்தை தானே இயக்கியும் நடித்துள்ளார். அந்த அளவுக்கு சினிமாவில் பன்முகம் கொண்ட பூஜா காந்தி, தமிழில், கொக்கி, திருவண்ணாமலை, தலைஎழுத்து போன்ற படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் பெங்காலி நடிகையான இவர் கன்னடத்தில்தான் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.
அதனால், கர்நாடகத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு அரசியலிலும் ஈடுபாடு கொண்டவரான பூஜாகாந்தி, சினிமாவில் நடித்துக்கொண்டே கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரான குமாரப்பா முன்னிலையில் அவரது ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தவர். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி எடியூரப்பாவின் ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதையடுத்து, ஒய் எஸ்.ஆர் காங்கிரசில் இணைந்த பூஜாகாந்தி, கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். அதனால் கட்சியில் அவருக்கு இருந்த மரியாதை குறைந்ததோடு, பூஜாகாந்திக்கும் மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு குறைந்து விட்டதோ என்கிற அச்சம் ஏற்பட்டது.
அதனால் அதையடுத்து அரசியலில் ஆர்வம் இல்லாமல், சினிமாவில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வந்த பூஜாகாந்திக்கு மீண்டும் அரசியல் மோகம் ஏற்பட்டுள்ளதாம். சில ஆண்டுகளிலேயே மூன்று காட்சிகளுக்கு தாவி விட்ட நடிகை, அடுத்தபடியாகவும் சில கட்சிகளுக்கு தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாராம். ஆனால் இன்னும் எந்த கட்சியின் கதவுகளும் பூஜாவுக்காக திறக்கவில்லையாம்.