ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு சினிமாவில் ஜெயித்த பிறகுதான் திருமணம் செய்வது என்று லட்சியம் வைத்திருப்பார்கள். சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கடைசியாக அப்படி திருமணம் செய்தார். அந்த வரிசையில் வருகிறார் சாட்டை அன்பழகன். பிரபுசாலமன் தயாரித்த சாட்டை படத்தை இயக்கியவர். பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நல்ல படமாக அது இருந்தது. நல்ல வரவேற்பையும் பெற்றது.
அன்பழகனுக்கும் அவரது உறவுக்கார பெண் எம்.மாலாவுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். மாலா எம்.எஸ்.சி பி.எட் படித்துள்ளார். இவர்கள் திருமணம் நாளை (ஆகஸ்ட் 31) காலை அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமத்தில் நடக்கிறது. திருமணத்தில் ஏராளமான நண்பர்களும், உறவினர்களும், திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.