அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
1965ம் ஆண்டு வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். வெளியான ஆண்டே 175 நாட்களை தாண்டி வெள்ளிவிழா கண்ட படம். இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி அகன்ற திரையில் மீண்டும் வெளியிட்டார் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம். இப்போது படம் ஆல்பர்ட் காம்பளக்சிலும், சத்தியம் காம்பளக்சிலும் தினமும் ஒரு காட்சியாக 175 நாளை தொட்டுவிட்டது. புதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் மீண்டும் சாதித்திருக்கிறார். வருகிற 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் பிரமாண்ட விழா நடத்தி இந்த வெற்றியை கொண்டாட இருக்கிறார்கள்.