ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகங்கள் ஆர்யன்-நிஷா- மதன்-சுமலதா நடித்துள்ள படம் கிழக்கே உதித்த காதல். கே.முனிசங்கர் இயக்கியுள்ள இப்படம் முக்கோண காதல் கதையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ரவி கிரண் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த இப்படம் தற்போது திரைக்கு வர தயாராகி விட்டது.
அதையடுத்து படத்தை தணிக்கை சான்றிதழுக்காக சமீபத்தில் அனுப்பினர். அப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப்பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் அதிக உருக்கமாக படமாக்கப்பட்டிருப்பதாக சொன்னார்களாம். அதோடு, படத்தில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசை அற்புதமாக இருப்பதாக இசையமைப்பாளர் ரவிகிரணை வெகுவாக பாராட்டினார்களாம். அதைக்கேட்டு நெகிழ்ந்து போனாராம் ரவிகிரண்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், எனது முதல் படமான கிழக்கே உதித்த காதல் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதனால் படம் திரைக்கு வரும்போது ரசிகர்கள் மத்தியில் இருந்து எனது இசைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் இப்போது தணிக்கைக்குழு அதிகாரிகள் முன்கூட்டியே பாராட்டியிருப்பது என்னை பெரிய அளவில் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதோடு, படத்துக்குபடம் வித்தியாசமான இசையை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியுள்ளது என்கிறார்.
ரவிகிரண் தற்போது கள்ளத்தனம், சுருளி, மலைநாட்டான் கிமு 3000, புல்லு உள்பட அரை டஜன் படங்களுக்கு பிசியாக இசையமைத்தபடி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.