ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
கடல் படத்தையடுத்து, மகேஷ் பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதி ஹாசன் ஆகியோரை இணைத்து, ஒரு மெகா படம் இயக்க திட்டமிட்டிருந்தார், மணிரத்னம். சம்பள விஷயத்தில் மகேஷ் பாபு உடன்படாததால், அந்த திட்டத்தை தள்ளி வைத்து விட்டார். அதற்கு பதிலாக, மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானை, அடுத்த படத்தின் நாயகனாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், இந்தி நடிகை அலியா பட்டை, அந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க வைக்கிறார். ஏற்கனவே, அனேகன் படத்திலேயே அலியா பட்டை தமிழுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தார் தனுஷ். கால்ஷீட் பிரச்னையால் அது, 'ஒர்க்அவுட்' ஆகவில்லை. இந்த படத்தில் எப்படியாவது கால்ஷீட் கொடுத்து, நடித்து விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் அலியா பட்டின் மனம் விரும்பும் டைரக்டர்களில், மணிரத்னமும் ஒருவராம்.