ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சீரியல்களில் நடிப்பது, தமிழ், மலையாளம், கன்னடம் என மாறி மாறி நடிப்பதுதான் இப்போது பேஷன். காரணம் கொட்டும் பணம். ஆனால் சமீதா ஒரு நேரத்தில் ஒரு சீரியல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். தற்போது பிள்ளைநிலா சீரியலில் நடிக்கும் அவர் வேறு சில சீரியல் வாய்ப்புகள் வந்தும் தவிர்த்து விட்டார். காரணத்தை அவரே சொல்கிறார்....
"ஒரு சீரியலில் சிறிய கேரக்டரில் நடிப்பவர்கள் வேறு சீரியலில் நடிக்கலாம். ஆனால் நாயகியாக நடிக்கும்போது ஒரு சீரியலில் நடித்தால்தான் அதில் கவனம் செலுத்த முடியும். இன்னொரு சீரியலில் நடிக்கும்போது காஸ்ட்யூமில் தொடங்கி மேனரிசம், வசன உச்சரிப்பு, அத்தனையிலும் வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும். ஒரு கேரக்டரில் இருந்து வெளியே வந்து அடுத்த கேரக்டருக்குள் நுழைய வேண்டும். இது சில நாள் சூட்டிங் நடக்கும் சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். சின்னத்திரையில் முடியாது. எனவே தான் ஒரே நேரத்தில் ஒரு சீரியல் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பிள்ளைநிலா முடிந்த பிறகு அடுத்த சீரியலில் நடிப்பேன். அதுவரைக்கும் பிள்ளை நிலாவில்தான் கவனம் செலுத்துவேன்" என்கிறார் சமீதா.