ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யார் யாருக்கோ நடிக்கும் ஆசை வரும் போது சினிமாவிலேயே இருப்பவர்களுக்கு நடிக்க ஆசை வராதா என்ன...இசையமைப்பாளராக ஓரிரு படங்களில் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தனது பெயரில் தளபதி நடிகரின் பெயரை வைத்துள்ள இசையமைப்பாளருக்கும் நடிகராக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதனால், சொந்தமாக பட நிறுவனம் ஆரம்பித்து ஆங்கிலத்தில் 'ஐ' என பொருள்படும் தமிழ்ப் படம் ஒன்றில் நாயகனாக நடித்தார். சரி ஒரு படத்துடன் ஆசை முடிந்தது என்று பார்த்தால் அடுத்ததும் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்து முடித்து விட்டார். புகழ் பெற்ற காதல் ஜோடிகளில் ஆண் பெயரைக் கொண்ட அந்தப் படமும் இந்த வாரம் வெளிவர உள்ளது.
இதனிடையே, இனி அவர் இசையமைப்பதை நிறுத்திவிட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறாராம். பழம் பெரும் வில்லன் நடிகர் பெயரில் உருவாகி வரும் ஒரு படத்திற்கு அவர்தான் இசை. அந்தப் படத்திற்காக அவரிடம் பின்னணி இசையை வாங்குவதில் போதும் போதுமென்றாகி விட்டதாம். அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான முன்னாள் கிரிக்கெட் வீரரின் பெயர் கொண்ட நடிகரிடமே இனி நான் இசையமைக்கப் போவதில்லை, நடிப்பு மட்டுமே என்று சொல்லியிருக்கிறார். அநேகமாக இதுதான் தான் இசையமைக்கும் கடைசி படம் என்றாராம். புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்து கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இசையமைப்பாளர் இப்படி திடீரென ஒதுங்கிப் போவதன் காரணம் மர்மமாகவே உள்ளதாம்.
அவருடைய முடிவுகள் அனைத்திற்கும் அவருடைய மனைவியான, முன்னாள் தொலைக்காட்சித் தொகுப்பாளர்தான் காரணமாக இருக்கிறாராம். மனைவி சொல்லே மந்திரம் என கணவர் அனைத்திற்கும் தலையாட்டுகிறாராம். இருக்கிறத விட்டுட்டு இப்படி பறக்கிறதுக்கு ஆசைப்படறாரே இவர் என நெருங்கியவர்கள் வருத்தப்படுகிறார்களாம்.