ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
களவாணி விமல், நிஜத்தில் ரொம்ப நல்ல மனிதர். தான் நடித்த படம் வெற்றி பெற்று அந்த தயாரிப்பாளர் தனக்கு வரவேணடிய சம்பளத்தை தராமல் இருந்தால்கூட வாய் திறந்து கேட்க மாட்டார். அதோடு, ஜன்னல் ஓரம் என்ற படத்தில் நடித்தபோது படத்தை ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளருக்கு சிரமம் ஏற்பட்டதால் தனது மொத்த சம்பளத்தையும் விட்டுக்கொடுத்தார் விமல்.
தங்களுக்கு தர வேண்டிய சம்பளத்தில் ஒரு லட்சம் வரவில்லையென்றால்கூட நடிகர் சங்கம், கமிஷனர் ஆபீஸ் என்று கம்ப்ளெயிண்டுடன் செல்லும் நடிகர்-நடிகைகளுக்கு மத்தியில் விமல் இப்படி தாராளமாக விட்டுக்கொடுப்பதால் இப்போது அவர் கோடம்பாக்கத்திலுள்ள பல தயாரிப்பாளர்களின் செல்லபிள்ளையாகி விட்டார்.
இந்த விமலுக்கு சொந்த ஊர் மணப்பாறை. சமீபத்தில் அங்கு சென்றபோது பழைய நினைவுகளில் சிறகடித்தாராம். அப்போது தான் படித்த பள்ளிக்கூடத்துக்கும் சென்றிருக்கிறார். அவரைப் பார்த்ததும் அங்குள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் நெகிழ்ந்து போனார்களாம். அப்போது, பள்ளிக்கு நான் ஏதாவது உதவி செய்யனுமா? என்று தானே வாய்திறந்து கேட்ட விமலிடம், கம்ப்யூட்டர் வசதி இல்லை செய்து கொடுத்தா நல்லாயிருக்கும் என்று சொன்னார்களாம். மறுபேச்சு பேசாமல், அந்த இடத்திலேயே செக் போட்டு கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.
ஆக, சினிமா வட்டாரத்தில் பணம் வாங்காமல் நல்ல பெயரெடுத்து வரும் விமல், சொந்த ஊரில் பணம் கொடுத்து நல்ல பிள்ளையாகியிருக்கிறார்.