மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஐம்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து எண்பதுகள் வரை பல வேடங்களில் பல பாடி லாங்குவேஜூகள் காட்டி, வாய்ஸ் மாடுலேஷன் செய்து அசத்தியவர் வில்லன் நடிகர் அசோகன். தந்தையின் வில்லத்தனமான நடிப்பின் ஈர்ப்பால் அவரைப் போலவே வில்லன் நடிகராக இப்போது தமிழ் சினிமாவை வலம் வந்து கொண்டிருக்கிறார் வின்சென்ட் அசோகன். ஏய், நீ வேணுன்டா செல்லம் உள்ளிட்ட 19 படங்களில் நடித்து முடித்திருக்கும் வின்சென்ட், தற்போது தமிழ் திரையுலகின் பிஸி வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது அவர் வல்லகோட்டை, ஆதி பகவன், வித்தகன், 2010 பாக்யராஜ் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிப்பில் தனக்கென தனி பார்மூலா எதுவும் வைத்திருக்கவில்லை என்று கூறும் வின்சென்ட், கதைக்கு என்ன தேவையோ அதை தத்ரூபமாக நடித்துக் கொடுக்கிறேன் என்கிறார். அப்பாவின் வித்தியாசமான வில்லத்தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்காக அவரோட நடிப்பை காப்பி அடிக்க மாட்டேன். அவரோட நடிப்பை உள்வாங்கிக் கொண்டு, என்னோட ஸ்டைலையும் சேர்த்து வெளிப்படுத்துறேன். அதுதான் என்னை வெற்றி வில்லனாக்கியிருக்கிறது என்கிறார் வின்சென்ட்.