சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுமாகி இருப்பவர் அகிலா கிஷோர். பெங்களூர் பொண்ணு. க.தி.வ.இ.,திற்கு பிறகு வாய்ப்புகள் குவிவதால் தமிழ் நாட்டிலேயே செட்டிலாகிவிடும் முடிவில் இருக்கிறார் அகிலா.
இதுபற்றி அவர் கூறியதாவது: எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். எங்கள் வீட்டில் எல்லோருமே டாக்டர்கள், என்ஜினீயர்கள் தான். நான் மட்டும் மீடியாவைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்தாலும் அப்புறம் சுதந்திரம் கொடுத்தார்கள். அழகி போட்டிகளில் டைட்டில் வின் பண்ணினேன். மாடலிங் செய்தேன். அதன் மூலம் பாதேபாதே என்ற கன்னடப் படத்தில் நடித்தேன். கால பைரவா, பாய்ஸ் என இரண்டு படங்களில் நடித்தேன். அவை இன்னும் ரிலீசாகவில்லை.
பாதேபாதே படத்தை பார்த்துவிட்டு பார்த்திபன் சார் போன் பண்ணி ஆடிசனுக்கு வரச்சொன்னார். அவரைப் பற்றி எனக்குத் தெரியாது கூகுளில் பார்த்தபோது அவர் தேசிய விருது பெற்ற இயக்குனர்னு தெரிஞ்சதும் அடுத்த பிளைட் பிடிச்சு சென்னை வந்துவிட்டேன். ஆடிசனில் ஜெயிச்சேன். இப்போ படமும் ஜெயிச்சிருச்சு. இதுவரை மூன்று பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. எதிலும் இன்னும் சைன் பண்ணல. "என் படத்துக்கு பிறகு நிறைய படங்கள் வரும் நல்ல கதைகளை செலக்ட் பண்ணி பண்ணு" என்று பார்த்திபன் சார் சொன்னார். அதனால் வெயிட் பண்றேன்.
இனி சென்னைதான் எனது ஊர் என்று முடிவு செய்துவிட்டேன். நடிப்பு, கிளாமர், பிகினி டிரஸ், முத்தக்காட்சி எப்படி வேணாலும் நடிக்கத் தயார். இப்படி நான் சொல்றதுக்கு காரணம் என் மேல உள்ள நம்பிக்கை. என் உடல் அமைப்பு. 6 அடி உயரம். பேசிக்கா நான் பேஸ்கட்பால் பிளேயர். அதனால உடம்பை பிட்டா வச்சிருக்கேன். பிகினி டிரஸ் எனக்கு நல்லா சூட்டாகும். அதனால நான் எதுக்குமே யோசிக்கத் தேவையில்லை. என்கிறார் அகிலா.