ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புத்தகம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சத்யா. நடிகர் ஆர்யாவின் தம்பியான இவர் அடுத்து அமரகாவியம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். ஆர்யாவே இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆர்யா பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு-
* ஒரு தயாரிப்பாளராய் அமரகாவியம் படத்தை தயாரித்திருப்பதை எப்படி பீல் பண்ணுகிறீர்கள்?
ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கும் சந்தோசத்தில் இருக்கிறேன். இப்படத்தை இயக்கியிருக்கும் ஜீவா சங்கர் எனது நண்பர். அவர் இயக்கிய நான் படம் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த படத்தை அதை விட சிறப்பாக இயக்கியிருக்கிறார். சின்னச்சின்ன காதல் உணர்வுகளையும் அவர் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். 1988-90களில் நடக்கும் காலகட்டத்தில் இப்படத்தின் கதை நகர்கிறது.
மேலும், என் தம்பி சத்யா முந்தைய படத்தை விட இப்படத்தில் ஒரு நடிகராய் ஜெயித்திருக்கிறார். அவரது நடிப்பை பல காட்சிகளில் நானே பார்த்து வியந்திருக்கிறேன்.அதனால் இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
* உங்கள் தம்பியை நீங்கள் போட்டியாக நினைக்கிறீர்களாமே?
அப்படியெல்லாம் இல்லை. என் தம்பி பெரிய நடிகராக வந்தால் அதைப்பார்த்து சந்தோசப்படும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். அதனால்தான் அவருக்காக இந்த படத்தை நான் தயாரிக்கிறேன். அதோடு, என் தம்பிக்கென்று வியாபார வட்டம் இல்லை என்றபோதும், அதிகப்படியான பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். தேவையான செலவுகளை செய்தால்தான் படத்தை சொன்னபடி என்னால் படமாக்கித்தர முடியும் என்று டைரக்டர் சொன்னார். அவர் கேட்டது போன்று நானும் செலவு செய்தேன். அவரும் எதிர்பார்த்ததைவிட நல்ல அவுட்புட் கொடுத்திருக்கிறார்.
* நயன்தாரா இந்த படத்தின் க்ளைமாக்ஸைப்பார்த்து அழுது விட்டாராமே அப்படியா?
படத்தை பார்த்து கண் கலங்கியது உண்மைதான். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நல்ல காதல் கதை என்றும் தனது கருத்தை கூறியிருக்கிறார். மேலும், இந்த படத்தின் எமோஷனல் என்னை டிர்ஸ்டப் பண்ணிடுச்சு என்றும் என்னிடம் சொன்னார் நயன்தாரா. ஆனால், பத்திரிகைகளில், இந்த க்ளைமாக்ஸ் தனது சொந்த வாழ்க்கையில் நடந்தது போல் இருந்ததாக நயன்தாரா கண்ணீர் விட்டதாக வேறு மாதிரியாக செய்திகள் வெளியாகி விட்டன.
* உங்கள் தம்பி சத்யாவுக்கு நடிப்பு ஆசை காட்டி, டைரக்டர் ஜீவா சங்கர்தான் கெடுத்து விட்டதாக சொன்னீர்களாமே?
என் தம்பி கல்லூரில் படித்து வந்தபோது, ஒருநாள் என்னை பார்க்க என் வீட்டிற்கு வந்திருந்தார் ஜீவா சங்கர். அப்போது இவனையும் நடிக்க வைக்கலாமே என்றொரு வார்த்தையை சத்யா காதுபடவே சொன்னார். விளைவு, அதிலிருந்தே நானும் நடிப்பேன் என்று சத்யா தொல்லை பண்ணத் தொடங்கி விட்டான். அதோடு படிப்பில் ஆர்வம் குறைந்து போய் விட்டது. அதனால் நான்கூட ஜீவா சங்கரிடம் சினிமா ஆசையை காட்டி என் தம்பியையும் இப்படி கெடுத்து விட்டாயே என்று திட்டினேன். ஆனால் இப்போது என் தம்பியை நானே ஆச்சர்யப்படும் வகையில் நடிக்க வைத்திருக்கிறார் ஜீவா சங்கர். அதனால் இப்போது அவர்கள் இருவரையுமே பாராட்டி வருகிறேன்.
* இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நீங்கள் செல்லாதது ஏன்?
ஒரு தயாரிப்பாளராய் தேவையான பணத்தை கேட்டபோதெல்லாம் கொடுத்தேன். மற்றபடி படத்தில் நடிப்பது என் தம்பி. இயக்குவது என் நண்பர் ஜீவா சங்கர். அவர்கள் இரண்டு பேருமே எதையும் சரியாகவும், நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்தான். அதனால் அவர்கள் சரியாக செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் ஸ்பாட்டுக்கு செல்லவில்லை. நான் அவர்கள் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்தேனோ அதை அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள் என்றார் ஆர்யா.