ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி அவருடைய 150வது படத்திற்காக பலரிடம் கதைகளைக் கேட்டு வருகிறார். ஏற்கெனவே, இயக்குனர் மணிரத்னம், சிரஞ்சீவியைச் சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் அதைப் பற்றிய பேச்சுகள் எழவில்லை. இந்த நிலையில் சிரஞ்சீவி, மணிரத்னம் சொன்ன கதையை நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன் பின் மணிரத்னம், சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜாவுக்கு ஒரு கதை தயார் செய்து அதை சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த கதையும் பிடிக்கவில்லை என ராம் சரண் பதிலளித்தாராம்.
அதற்குப் பதிலாக தெலுங்குத் திரையுலகின் கமர்ஷியல் இயக்குனர்களான கிருஷ்ண வம்சி, 'பொம்மரிலு' பாஸ்கர் படங்களில் நடிக்க சம்மதித்திருக்கிறார். மணிரத்னம் படத்தில் நடித்தால் நீண்ட நாட்களுக்குப் படப்பிடிப்பு நடக்கும், அது மட்டுமல்ல அவருடைய திரைக்கதை மிகவும் மெதுவாக இருக்கும் என ராம் சரண் கருதியதாலேயே அந்த வாய்ப்பை வேண்டாமென்று சொன்னதாகத் தெரிகிறது.
அதுவும் சமீப காலமாக மணிரத்னம் இயக்கிய படங்கள் வெற்றி பெறாததையும் அவர் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார். மணிரத்னம் படத்தை இவர் வேண்டாமென்று சொன்னதுதான் தெலுங்குத் திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ராம் சரண் வெறும் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்தால் போதுமா என அங்குள்ளவர்கள் கேட்கிறார்களாம்.
காசு பார்க்க வேண்டிய இடத்தில், கலைச் சேவையாவது...ஒன்றாவது...