ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வடக்கத்திய நடிகைகள் என்றாலே அவர்களின் பேவரிட் உணவு சப்பாத்தியாகத்தான் இருக்கும். ஆனால், மும்பை நடிகையான ஹன்சிகா, மும்பையில் இருந்தது வரை சப்பாத்திதான் அவரது முக்கியமான உணவாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு வந்தபிறகு இங்கு அதிகமாக கிடைக்கும் இட்லியை சாப்பிடத் தொடங்கியதில் இருந்து இட்லி பிரியை ஆகி விட்டார் ஹன்சிகா.
மேலும், சில விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, பிரியாணி மற்றும் சைனீஸ் உணவுகள் பரிமாறப்படும்போதுகூட, எனக்கு இட்லி இருந்தால் கொடுங்கள் என்றுதான் கேட்டு வாங்கி சாபபிடுகிறாராம். அதனால் இவர் என்ன வடநாட்டு நடிகையா? இல்லை தமிழ்நாட்டு நடிகையா? எனறு அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.
ஆனால் இதுபற்றி ஹன்சிகா கூறும்போது, நான் வடநாட்டு பெண்தான் என்றாலும், தென்னிந்தியாவுக்கு வந்து நடிக்கத் தொடங்கிய போதுதான் முதன்முறையாக இட்லி உணவுகளை அதிகமாக சாப்பிடத் தொடங்கினேன். மல்லிகப்பூ மாதிரியான இட்லியுடன் சாம்பார்,சட்னி என கலந்து சாப்பிடும்போது அந்த சுவையே தனி. அதற்கு நான் அடிமையாகி விட்டேன் என்று கூறும் ஹன்சிகா, கிராமப்புறங்களுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது, அந்த பகுதிகளில் உள்ள இட்லிகளைதான் சாப்பிடுகிறாராம். இட்லியின் சுவை ஒரே மாதிரியாக இருந்தாலும், சாம்பார், சட்னியின் சுவை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது என்கிறார் ஹன்சிகா.