ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் கர்நாடகா மாநிலம் ஷிவகா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நடந்து வருகிறது. இங்கு பிரமாண்ட அணைக்கட்டு செட்டு மற்றும் 40 அடி உயர சிவன் சிலை அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக அந்த மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
என்றாலும் லிங்கா படப்பிடிப்புக்கு எதிராக அவ்வப்போது கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆகஸ்ட் 20 அன்று படப்பிடிப்புக்கு செல்லும் சாலையில் கன்னட விவசாய அமைப்பினர் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு வாகனங்களை போக விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், "படப்பிடிப்புக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்" என்றனர். "படப்பிடிப்பால் எங்கள் பகுதி சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. படப்பிடிப்பை உடனே நிறுத்த வேண்டும்" என்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் சுற்றுசூழல் பாதிக்காதவாறு படப்பிடிப்பு நடத்த அறிவுறுத்துகிறோம். நாங்களும் கண்காணிக்கிறோம் என்று உறுதிமொழி அழித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.