ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் தம்பி ராமய்யாவை தவிர அனைவருமே புதுமுகங்கள்தான் நடித்துள்ளனர். விஷால், ஆர்யா, விஜயசேதுபதி, பிரகாஷ்ராஜ், அமலாபால், டாப்சி, பரத், சாந்தனு, விமல் என பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் அவர்கள் அனைவருமே கெஸ்ட் ரோலில்தான் வந்து செல்கிறார்கள்.
மற்றபடி, முக்கிய வேடங்களில் நடித்த அனைவருமே புதியவர்கள்தான். இதில் நாயகியாக நடித்துள்ள அகிலா கிஷோரின் நடிப்பு கோடம்பாக்கத்தில் பலரை கவர்ந்திருக்கிறது. நயன்தாரா பாதி, சுனைனா பாதி கலந்த கலவையாக இருக்கும் அகிலாவின் பர்பாமென்ஸைப் பார்த்த பாரதிராஜாகூட, அற்புதமாக நடிச்சிருக்காளே. இந்த நடிகையை எங்கே பிடிச்சே என்று பார்த்திபனிடம் கேட்டாராம்.
இதை நேற்று அப்படத்தின் வெற்றி சந்திப்பில் தெரிவித்த பார்த்திபன். அகிலா பற்றி மேலும் கூறுகையில், இந்த அகிலா தமிழுக்கு புதியவர் என்றாலும், அவரது தாய்மொழியான கன்னடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறார். ஆனபோதும் தமிழில்தான் முழுக்கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, தனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார். அதனால்தான் தமிழுக்கு வந்த முதல் படத்திலேயே பாரதிராஜாவிடம் பாராட்டு பெற்றிருக்கிறார் என்று கூறிய பார்த்திபன், நான் புதுமுகங்களை வைத்து இயக்கிய முதல் படமும் இதுதான். அதேபோல் நான் இயக்கிய படங்களில், நான் நடிக்காத முதல் படமும் இதுதான் என்றும் கூறினார்.