ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சரண், சிறு இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் படம் ஆயிரத்தில் இருவர். இப்படத்தில் வினய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்று(ஆகஸ்ட் 21ம் தேதி) திருநெல்வேலியை அடுத்த ரெட்டியார் சத்திரம் நான்கு வழிச்சாலையில் நடந்து வந்தது.
இந்நிலையில், முனி படத்தை தயாரித்த சரண், அப்பட போஸ்டர் அச்சடித்தது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு ரூ.25 லட்சத்திற்கு செக் கொடுத்துள்ளார் சரண். அந்த செக்கை, ஞானசேகரன் வங்கியில் செலுத்தியபோது பணமில்லை என்று திரும்பி வந்ததால், சரண் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் சிவகாசி போலீசார், படப்பிடிப்பில் இருந்த சரணை இன்று கைது செய்து, சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.