மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் சிபிராஜ், தயாரித்து, நடித்து வரும் படம் ''நாய்கள் ஜாக்கிரதை''. நாணயம் படத்தை இயக்கிய சவுந்தர்ராஜன் இயக்குகிறார். இந்தப் படம் ஒரு துப்பறியும் நாயை சுற்றி நடக்கிற கதை. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, மற்ற பணிகள் நடந்து வருகிறது.
இதுபற்றி சிபிராஜ் கூறியிருப்பதாவது: கடந்த 4 மாதங்களாக தொடர்ச்சியாக நடந்து வந்த படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. பெல்ஜியும் செப்போர்ட் என்ற நாயை தேடிக் கண்டுபிடித்து நடிக்க வைத்தோம். அதனை முறையாக பயிற்சி பெற்ற பயிற்சியாளர் மசூத் அகமத் என்பவர்தான் நடிக்க வைத்தார். சொன்னதை செய்யும் அருமையான நாய்தான் அது. ஆனால் சில நேரங்களில் கை கால்களை பதம் பார்த்து விடும்.
அதனுடன் நடிக்கும்போது 13 முறை கடிவாங்கி ஊசி போட்டிருக்கிறேன். ஆனாலும் பிரண்ட்லியான நாய். கடைசி நாள் படப்பிடிப்பில் அதனை பிரியவே மனம் இல்லை. என்றாலும் படத்தில் அதனை அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆறுதல் இருக்கிறது. இந்த மாத இறுதியில் ஆடியோவையும், அடுத்த மாதம் படத்தையும் வெளியிட இருக்கிறோம். தமிழ் சினிமாவில் இது முக்கியமான முயற்சியாக இருக்கும் என்கிறார் சிபிராஜ்.