ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய தேதியில் அட்டகாசமான உயரத்துடன், அழகாக இருக்கும் நடிகைகளில் அனுஷ்காவும் முக்கியமானவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து முப்பது வயதைக் கடந்தாலும் முன்னணியில் இருக்கிறார். எந்தவிதமான உடைகளிலும் பொருத்தமாக இருப்பது இவருக்கு ஒரு மிகப் பெரிய பிளஸ் பாயின்ட். ஆரம்பத்தில் யோகா பயிற்சியாளராக இருந்தவர் நாகார்ஜுனாவின் அறிமுகத்தால் 2005ம் ஆண்டில் 'சூப்பர்' என்ற தெலுங்கப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாகவே இருக்கிறார்.
தனக்கும் ஆரம்ப காலத்தில் சில தடங்கல்கள் இருந்ததாகவும் அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் இருந்ததாலேயே இந்த அளவிற்கு முன்னணிக்கு வந்திருப்பதாகவும் சொல்கிறார் அனுஷ்கா. “முதல் படமான 'சூப்பர்' படத்தில் நடிக்கும் போது படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும், நாயகன் நாகார்ஜுனாவும் நல்ல ஆலோசனைகளை வழங்கினர். அதன் பின் இரண்டாவது படத்தில் நடித்த போது பல தடங்கல்கள் வந்தன. அதனால் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று கூட நினைத்தேன். அப்படி திரும்ப வந்திருந்தால் என்னை மறந்து போயிருப்பார்கள். ஆனாலும், நம்பிக்கையுடன் தொடர்ந்து நடித்தேன். இம்மாதிரியான அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும்.
திரையுலகம் திறமையானவர்களுக்கு மதிப்பு கொடுக்கும், ஆனால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இங்கு புதுமுகங்களுக்கு யாரும் ரெட் கார்ப்பெட் வரவேற்பு கொடுப்பதில்லை. அதனால், அவமானங்களையும் தாங்கிக் கொள்ளும் வலிமையுடன் இருக்க வேண்டும்,” என்று சொல்கிறார்.
அழகுப் புயல் அனுஷ்காவை அவமானப்படுத்தியது யாரோ ....?