ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சுதந்திர தினத்தன்று வெளியான அஞ்சான் படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களே அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா பேசியதாவது: இதற்கு முந்தைய எனது படங்களை விட அஞ்சான் அதிக வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பைரசி வந்து விடக்கூடாது என்பதற்காக 1500 தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணியிருக்கிறோம். தமிழ் நாட்டில் 400 தியேட்டர்கள், ஆந்திராவில் 600 தியேட்டர்களில் ரிலீசாகியிருக்கிறது. கேரளாவில் மம்முட்டி மோகன்லால் தியேட்டர்களை விட அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணியிருக்கிறோம். எல்லாமே பாசிட்டிவாக இருக்கும்போது சிலர் மட்டும் படத்தை பற்றி நெகட்டிவிட்டியை (எதிர்மறை) பரப்பியிருக்கிறார்கள். இது ரொம்ப தவறு. அது தடுக்கப்பட வேண்டும். படத்தை விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கு. என்னை சுற்றி வேலி போட்டால்தான் நானும் சரியான பாதையில் பயணம் செய்ய முடியும். ஆனால் பாதையில் முள்ளை போட்டால் என்ன செய்ய முடியும். சினிமாவையே புரட்டி போடுற படம் எடுத்திருக்கோம். யாருமே எடுக்காததை எடுத்திருக்கோம் என்றெல்லாம் சொல்லவில்லை. மக்களை சந்தோஷப்படுத்த படம் எடுத்திருக்கோம். முடிஞ்சா பாராட்டுங்க. காயப்படுத்தாதீங்க. என்றார்.