ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'அஞ்சான்' திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களாகியும் அந்தப் படத்தைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள், கேலிகள், கிண்டல்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இது படக்குழுவை கடுமையாக பாதித்துள்ளது. நேற்று நடந்த பத்திரிகையாளர் காட்சியில் இதுகுறித்து சூர்யாவும், இயக்குனர் லிங்குசாமியும் மிகவும் வருத்தப்பட்டனர். இயக்குனர் லிங்குசாமி, “விமர்சனம் செய்பவர்களுக்காக படம் பண்ணவில்லை என்பதை மறைமுகமாகவும், ரசிகர்களுக்காகவே படம் செய்கிறோம் என்பதை நேரடியாகவும் குறிப்பிட்டுப் பேசினார்.
''அஞ்சான்' படத்தை மொத்தம் 1500 தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணியிருக்கோம். தமிழ்நாட்டுல 450 தியேட்டர்கள், ஆந்திராவுல 600 தியேட்டர்கள், கேரளாவுல 190 தியேட்டர்கள். கேரளாவுல மம்முட்டி, மோகன்லால் படம் ரிலீஸ் ஆகற அளவுக்கு தியேட்டர்கள்ல வெளியிட்டிருக்கோம். இவ்வளவு தியேட்டர்கள்ல படம் போட்டாலும் படத்துக்கு டிக்கட் கிடைக்கலைன்னு சொல்றாங்க. இந்தப் படத்தைப் பத்தின எதிர்பார்ப்பு ரசிகர்கள் கிட்ட அதிகமா இருந்துச்சி. எங்க கூட்டணி, கெட் அப்பு, லுக், இதெயெல்லாம் ரசிகர்கள் மத்தியில ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு.
சூர்யா சாரோட முந்தைய படங்களான 7ஆம் அறிவு, சிங்கம் 2 படங்கள் சேலம் ஏரியாவுல 75 லட்சம், 60 லட்சம் வியாபாரம் பண்ணுச்சின்னா, 'அஞ்சான்' 1 கோடியே 25 லட்சம் பண்ணியிருக்கு. நான் வந்து சூர்யாவோட மாஸானா, ஸ்டைலான படம் பண்ணணும்னு நினைச்சேன். யாரை நினைச்சி நான் இந்தப் படத்தை பண்ணனோ அவங்களோட கனெக்ட் ஆனதா நான் நம்புறேன். தியேட்டருக்குலாம் விசிட் பண்றப்போ நம்ம கிட்ட வந்து ரசிகர்கள் படம் சூப்பர்னு சொல்லிட்டுப் போறாங்க.
உங்களுக்கெல்லாம் தெரியும், படம் தொடங்கறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடியே பேஸ்புக்லயும், டிவிட்டர்லயும் யார் யாரோ என்னவெல்லாமோ சொன்னாங்க. படம் பார்த்துட்டு ஒருத்தர் என்ன சொன்னாலும் அதை ஏத்துக்கு நான் ரெடியா இருக்கேன். சொல்றவங்க என்ன வேணா சொல்லட்டும், நாங்க பார்த்து முடிவெடுக்கிறோம்னு சொல்லிட்டு தியேட்டருக்கு வர்ற ஜனங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். ரசிகர்கள்தான் எனக்கு தெய்வம் மாதிரி, தியேட்டர்ல உட்கார்ந்து படம் பார்க்கிறவங்களுக்கு மட்டும்தான் சினிமா. நான் என்ன நடக்கணும்னு நினைச்சனோ, அது நடந்துடுச்சின்னு நம்புறேன், ” என்றார் இயக்குனர் லிங்குசாமி.
'அஞ்சான்'னு படத்துக்கு பேரை வச்சிட்டு, ரசிகர்கள் இப்படி அஞ்ச வச்சிட்டாங்களே....!