ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரவீண் காந்தி இயக்கத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் 'புலிப் பார்வை' படத்தில் கற்பனைக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
“பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட போது, யாருமே காப்பாற்ற முயற்சி செய்திருக்க மாட்டார்களா ?, இவரைப் பிடித்து வைத்துக் கொண்டு உன் அப்பா எங்கே ? என்று மிரட்டியிருப்பார்கள், என இப்படியெல்லாம் ஒரு இயக்குனராக பிரவீன் காந்திக்கு பல கற்பனைகள் சிந்தனையில் ஓடியிருக்கிறது. அதைத் திரையில் வடித்திருக்கிறார். திரையில் நீங்கள் பார்க்கப் போவது எல்லாம் உண்மையல்ல, ஆனால், எல்லாமும் பொய்யல்ல, இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். இந்த இனத்திற்காகச் செய்ய வேண்டும் என நினைக்கிறது மிகவும் போற்றத்தக்கது, மதிக்கத்தக்கது. இப்படி வருகிற முயற்சிகள் முறிக்கப்பட்டு விடக் கூடாது. படத்தில் குறைகள் இருக்கலாம், ஆனாலும் இந்தப் படங்கள் திரைக்கு வரவேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற படங்களே எடுக்கப்படாது போய்விடும்,” என்று இசை விழாவில் 'புலிப் பார்வை' படத்தை ஆதரித்துப் பேசினார்.
பாலச்சந்திரன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது பற்றிய கற்பனைக் கலந்த கதையை சீமான் எப்படி ஆதரிக்கலாம் என மாணவர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் கேள்வி எழுப்புகின்றனர். மலையாள ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் 'இனம்' படத்தை எடுத்தது தவறு என்று அந்தப் படத்தை நிறுத்தியவர்கள், ஒரு தமிழரே தமிழனைப் பற்றிய படத்தை தவறாக எடுத்தால் ஆதரிப்பது ஏன் ? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.