ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோடம்பாக்கத்தின் பிக்கப் மன்னன் என்று பெயரெடுத்திருப்பவர் ஆர்யா. எந்த மாநிலத்தில் இருந்து புதுமுக நடிகைகள் கோலிவுட்டிற்குள் நுழைந்தாலும் அவர்களை எளிதாக மடக்கி பிக்கப் செய்து விடும் ஆர்யா, பின்னர் அவர்களை டிராப் பண்ணுவதே இல்லை என்று பார்த்திபன் உள்ளிட்ட பலரும் அவர் மீது புகார் கூறி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில, ஆர்யாவை பல மேடைகளில் பெண்களின் மனம் கவர்ந்தவர், நடிகைகளின் ரியல் ஹீரோ என்று எக்கச்சக்கமாக சொல்லி அவரை குளிப்பாட்டி வந்த பார்த்திபன், தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தமைக்காக ஆர்யாவுக்கு பெண்களை உஷார் பண்ணுவது எப்படி என்றொரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளாராம்.
ஏற்கனவே பெண்களை உஷார் பண்ணுவதில் மன்னரான ஆர்யாவுக்கே இப்படியொரு புத்தகத்தை கொடுத்திருப்பதின் காரணம், இன்னும் அவர் அதுபற்றி அறியாத பல அரிய விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானாம். அதையடுத்து அந்த புத்தகத்தை படித்த ஆர்யா, இத்தனை நாளும பெண்களை கவருவது எப்படி என்ற எல்லா விசயமும் எனக்குத் தெரியும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது பார்த்திபன் சார் கொடுத்த புத்தகத்தை படித்த பிறகுதான், இன்னும் நான் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் ஆர்யா.