Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முஸ்லிமாக மாறியது ஏன்? யுவன் விளக்கம்

13 ஆக, 2014 - 13:41 IST
எழுத்தின் அளவு:

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. 100 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். இசைஞானி இந்து மதத்தில் பக்தி பழம். தேவாரம், திருவாசகத்தை கரைத்து குடித்தவர். சரஸ்வதி தனக்குள் இருப்பதாக நினைப்பவர். அவரது மகன் முஸ்லிமாக மாறியது அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிறது. நான் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்பதற்கு யுவன் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறியிருப்பதாவது: எனக்கு என்னோட அம்மான்னா உயிர். என்னோட கஷ்டங்களில் கூட இருந்தவங்க. தன்னந்தனி தூணாக இருந்து எங்க குடும்பத்தை காப்பாத்தினவங்க. அவங்களோட இழப்பு என்னை மாத்திடுச்சு. ஒரு வேலையாக மும்பை போய்விட்டு திரும்பியபோது அம்மா மரணப்படுக்கையில இருந்தாங்க. நானும், தங்கையும் அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். போற வழியில அம்மா என் கையை இருக்கமா பிடிச்சிருந்தாங்க. திடீர்னு கை நழுவி விழுந்தது. அம்மா எங்களை விட்டு போயிட்டாங்க. ஒரு வினாடிக்கு முன்பு அவருக்குள்ள இருந்த ஜீவன் இப்போ எங்க போச்சுன்னு எனக்குள்ள கேக்க ஆரம்பிச்சேன். அதுக்கான விடை கிடைக்கல.


அம்மாவோட பிரிவு என்னை தனிமைப்படுத்திடுச்சு. ரொம்ப கவலையில இருந்த நேரம் ஒரு முஸ்லிம் நண்பர் மெக்கா போய்விட்டு திரும்பியிருந்தார் அவர் என்னிடம் "யுவன் நீ ரொம்ப கவலையில இருக்கே, தாங்க முடியாத கவலை வரும்போது இந்த முசல்லாவில் (தொழுகைக்கு பயன்படும் தரைவிரிப்பு) கொஞ்ச நேரம் உட்காரு போதும்" என்று கொடுத்துவிட்டுச் சென்றார். எனக்கு நம்பிக்கை இல்லாம அதை மூலையில போட்டேன்.


ஒரு கட்டத்துல அம்மா கவலை ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சது. மன அழுத்தம் அதிகமாச்சு. அந்த முசல்லா நினைவு வந்து அதன் மீது உட்கார்ந்து யா அல்லா... என்னோட பாவங்களை மன்னிச்சு, என்னை இந்த கவலையிலிருந்து வெளியில கொண்டு வந்த விடுன்னு கத்தி கதறினேன். "வா... இஸ்லாத்துக்கு வந்துவிடு"ன்னு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு வந்துச்சு. அது ஒரு அற்புதமான உணர்வு. அதை வார்த்தையில் வெளிப்படுத்த முடியாது.


அன்றிலிருந்து அதாவது 2012ம் ஆண்டிலிருந்து திருக்குரான் மொழிபெயர்ப்புகளை படிக்க ஆரம்பிச்சேன். தொழுகை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை கத்துக்க ஆரம்பிச்சேன். 2014 ஜனவரியில் முஸ்லிமாக மாறுவது என்று முடிவு செய்தேன். மரணத்தின் தருவாயில் எங்கம்மா "எனக்கு பிறகு நீ தனிமரமாயிடுவே இஸ்லாம்ங்ற மரத்தின் கீழ் ஒதுங்கிக்கோ"ன்னு எங்கம்மா சொன்னதாவே நான் எடுத்துக்கிட்டேன்.


நான் முஸ்லிமாக மாறியது என் அப்பாவுக்கு பிடிக்கல. என் அண்ணனும் அண்ணியும் என் பக்கம் நின்னாங்க. படங்களில் என் பெயர் யுவன் ஷங்கர் ராஜான்னு வர்றதால இன்னும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ரிக்கார்டுகளில் பெயரை மாற்றவில்லை. விரைவில் மாற்றுவேன். என்றார் யுவன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in