ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாடோடிகள் அனன்யா அதன்பிறகு சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் மலையாளத்திலும் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு வருகிறார். அந்தவகையில் இதுவரை மலையாளத்தில் மட்டுமே 23 படங்களில் நடித்து விட்டாராம் அனன்யா. ஆனபோதும்,. இன்னும் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லையாம்.
இதுபற்றி அனன்யா கூறுகையில், தமிழில் சமுத்திரகனியின் நாடோடிகள் படம் எனக்கு நல்லதொரு என்ட்ரியாக அமைந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து மலையாளத்தில் இருந்தும் படங்கள் வந்ததால் தமிழை குறைத்துக்கொண்டு மலையாளத்தில் நடிக்கத் தொடங்கினேன். அப்படி நான் ஏற்று நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை.
அதனால்தான் மீண்டும் தமிழில் சீடன் படம் மூலம் என்ட்ரி கொடுத்தேன். அதையடுத்து எங்கேயும் எப்போது ஹிட்டாக அமைந்தது. அதனால்தான் இப்போது தமிழில் அதிக படங்களில் நடிக்க ஆசைப்பட்டு மலையாள படங்களை குறைத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லும் அனன்யா, தமிழைப்பொறுத்தவரை ஹீரோயினியாக மட்டும்தான் நடிப்பேன் என்கிற கொள்கையையும் தற்போது விலக்கிக் கொண்டுள்ளாராம். மாறாக, தனது திறமைக்கு சவால் விடக்கூடிய வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருப்பதாக கூறிவருகிறார்.