ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரே மொழி பேசும் மக்களை இரு மாநிலங்களாகப் பிரித்து விட்டதால் யார் தவிக்கிறார்களோ இல்லையோ தெலுங்குத் திரையுலகம் நிறையவே தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக திரைப்படங்களை வெளியிடும், அதிக தொழிலாளர்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்தத் திரையுலகத்தில் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கும் பிரிவினை விஷயங்கள் நடுநிலையாளர்களை நிறையவே பாதித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்துக்கு என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், 2000 ஏக்கர் நிலத்தை ஒதுக்க முடிவு செய்திருக்கிறார். இதன் மூலம் உருவாகும் திரைப்பட நகரத்துக்கு 'கேசிஆர் பிலிம் சிட்டி' என பெயரை வைக்க வேண்டும் என தற்போதைய முன்னணி நடிகர் மகேஷ்பாபுவின் அப்பாவும், சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கிருஷ்ணாவின் இந்தப் பேச்சு அங்கு ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர் அரசியலில் இறங்க வாய்ப்புள்ளதாக தெலுங்குத் திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள். மாநிலப் பிரிவினைக்கு முன் அதை எதிர்த்து வந்த தெலுங்கு நட்சத்திரங்கள் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் அவர்களை எந்த மாநிலத்தவர்களாக அடையாளம் காட்டிக் கொள்வதென முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அதே சமயம், நாகார்ஜுனா போன்றவர்கள் தெலுங்கானாவை மையப்படுத்தி பணியாற்ற முடிவெடுத்து விட்டார்களாம். ஆனால், சில தயாரிப்பாளர்களோ ஹைதராபாத்தை விட்டுப் பிரிந்து ஆந்திராவிற்கு தங்களது திரைப்படத் தொழிலை மாற்றிக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இதனால், எதிர் வரும் காலங்களில் பல பிரச்சனைகள் ஏற்படுமோ என தெலுங்குத் திரையுலகினர் கவலையடைந்து வருகின்றனர். அதாவது, தெலுங்கானாவில் தயாராகும் படங்கள் ஆந்திராவில் வெளியாகப் பிரச்சனை வருமா அல்லது ஆந்திராவில் தயாராகும் படங்கள் தெலுங்கானாவில் வெளியாகப் பிரச்சனை வருமா என்றெல்லாம் யோசித்து வருகிறார்களாம். ஒரே மொழி பேசும் மக்களைப் பிரித்ததால் தெலுங்குத் திரையுலகம் தவித்து வருவது நிதர்சனமான உண்மை...போகப் போகத்தான் என்ன நடக்கும் என்பது தெரிய வரும்...