ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரசிகர் மன்றங்கள் இல்லாமலே கதாநாயகனாக கொடிகட்டிப்பறந்தவர் சிவகுமார். அவரது புதல்வர்களான சூர்யாவும் கார்த்தியும் ரசிகர் மன்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானதிலிருந்து பல வருடங்கள் வரை சூர்யாவும் ரசிகர் மன்றங்களை ஆதரிக்கவில்லை. அவரது போட்டி நடிகர்களை பார்த்து பிறகு, சூர்யாவுக்கும் ரசிகர் மன்றம் ஆசை வந்தது. அஞ்சான் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆதரவு தேவை என்பதாலோ என்னவோ ரசிகர்கள் மீதும், ரசிகர் மன்றங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அஞ்சான் படத்தின் டீசர் சக்சஸ் மீட், ஆடியோ ரிலீஸ் என அனைத்து விழாக்களிலும் தன்னுடைய ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் சூர்யா. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுக்க உள்ள தன் ரசிகர்களை நேரில் சந்திப்பதன் மூலம் தன் ரசிக பலத்தை உயர்த்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அஞ்சான் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது, அங்குள்ள நிர்வாகிகள் மூலம் ரசிகர்களை திரட்டி வரச் செய்து, அவர்கள் முன் உரையாற்றினார். அடுத்த கட்டமாக, அஞ்சான் படத்தின் தெலுங்கு டப்பிங்கான சிக்கந்தர் படத்தை ஆந்திராவில் ஓட வைக்க, சில நாட்களாக ஆந்திராவில் முகாமிட்டிருக்கிறார் சூர்யா. ஐதராபாத், விசாகப்பட்டினம் என ஆந்திராவில் உள்ள முக்கிய ஊர்களுக்கு சென்று தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் சூர்யா.