லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
காமெடி நடிகர் சுருளி மனோகர் மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 51. சின்னத்திரையில், மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற காமெடி தொடர் மூலம் பிரபலமானவர் சுருளி மனோகர். பின்னர் சினிமாவிலும் அறிமுகமாகி படிக்காதவன், சுறா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தான், புதுமுகங்களை வைத்து ''இயக்குநர்'' என்ற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையி்ல், சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த சுருளி மனோகர் இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) மதியம் 1.30 மணியளவில் திடீரென மாரடைப்பால் இறந்தார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவியும், கோமதி, சரண்யா, சங்கீதா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். சுருளி மனோகரின் இறுதிசடங்கு நாளை நடைபெறுகிறது.
கஷ்டப்படுகிற குடும்ப பின்னணியில் இருந்து வந்து நடிகராக, காமெடி நடிகராக, படிப்படியாக முன்னேறி, இயக்குநராக உயர்ந்து வந்த நிலையில், அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமல்லாது திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.