பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
காமெடி நடிகர் சுருளி மனோகர் மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 51. சின்னத்திரையில், மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற காமெடி தொடர் மூலம் பிரபலமானவர் சுருளி மனோகர். பின்னர் சினிமாவிலும் அறிமுகமாகி படிக்காதவன், சுறா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தான், புதுமுகங்களை வைத்து ''இயக்குநர்'' என்ற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையி்ல், சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த சுருளி மனோகர் இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) மதியம் 1.30 மணியளவில் திடீரென மாரடைப்பால் இறந்தார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவியும், கோமதி, சரண்யா, சங்கீதா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். சுருளி மனோகரின் இறுதிசடங்கு நாளை நடைபெறுகிறது.
கஷ்டப்படுகிற குடும்ப பின்னணியில் இருந்து வந்து நடிகராக, காமெடி நடிகராக, படிப்படியாக முன்னேறி, இயக்குநராக உயர்ந்து வந்த நிலையில், அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமல்லாது திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.