ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரதேசி படத்தையடுத்து அதர்வா நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் இரும்புக்குதிரை. ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ள இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதில் அதர்வாவுடன் ப்ரியாஆனந்த், லட்சுமிராய், ஏழாம் அறிவு வில்லன் ஜானி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பிரஸ்மீட் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது இரும்புக்குதிரையில் தான் நடித்தது பற்றி அதர்வா பேசுகையில்,
பரதேசி படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைகளாக நான் தேடிக்கொண்டிருந்தபோது, இந்த படத்தை இயக்கியுள்ள யுவராஜ்போஸ் என்னை சந்தித்து கதை சொன்னார். ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அதனால் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கால்சீட் கொடுத்தேன். அவரும் கதை சொன்னது போன்றே படமாக்கியுள்ளார். அதனால் கண்டிப்பாக இருமபுக்குதிரை வெற்றி பெறுவதோடு, ஒரு இண்டர்நேஷனல் ஸ்டைல் படமாகவும் இருக்கும். அதனால் முழுநம்பிக்கையுடன் நடிக்கத் தொடங்கினேன்.
மேலும், இந்த படம் பைக் ரேஸை மையப்படுத்தி உருவாக்கப்பட்டபோதும் பைக்கில் செல்பவர்கள் நிதானமில்லாமல் பைக்கை ஓடடக்கூடாது என்கிற தனி மனித ஒழுக்கத்தையும் சொல்லும் படமாக இருக்கும். ஒரு சிக்னல் ஜம்பிங்கில் விபத்து நடக்கிறது. அந்த விபத்துக்கு முன்பு, பின்பு நடக்கிற விசயங்களாக கதை நகர்கிறது.
அதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்புவரை 4 கியர் பைக்தான் ஓட்டியிருந்தேன். இந்த படத்துக்காக 8 கியர் பைக் ஓட்டி பயிற்சி எடுத்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு சென்று 5 நாட்களுக்கு பிறகுதான் அந்த பைக்கை ஓட்டினேன். அந்த ரேஸ் பைக் 5 கியரில் சென்றாலே 180ல் செல்லும் என்று தனது பிரமிப்பை சொல்லும் அதர்வா, இந்த படம் பைக் சூதாட்டத்தை மையமாகக்கொண்டு உருவாகவில்லை. நேர்மையான விளையாட்டு சம்பந்தப்பட்ட, எல்லா விதிகளையும் பின்பற்றும் படமாக உருவாகியிருப்பதாக சொல்கிறார்.