ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வந்த அஞ்சலி, திடீரென தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் சிலநாட்கள் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் வெளி உலகிற்கு தோன்றிய அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர்ந்து, தன் சொத்துக்களை அபகரிக்க நினைப்பதாக பரபரப்பு குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. அதேசமயம் இயக்குநர் களஞ்சியமும், அஞ்சலி மீது புகார் கொடுத்தார். தனது ஊர் சுற்றி புராணம் படத்தை முடித்து தர வேண்டும், அதுவரை அவர் வேறு படங்களில் நடிக்க கூடாது, அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார். ஆனால் அஞ்சலியோ எப்போதும் போல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சுராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது சித்தி, அவரது மகனுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்து வந்தார், திருமணமும் விரைவில் நடக்க இருந்த நிலையில், இப்போது அந்த திருமணம் நின்று விட்டது. இதற்கு காரணம் அஞ்சலி தான் என்று அவரது சித்தி பாரதிதேவி நினைக்கிறார். தன் மீதுள்ள வெறுப்பால், பெண் வீட்டாரிடம் சென்று எதை எதையோ சொல்லி இந்த திருமணத்தை நிறுத்தி விட்டதாக அஞ்சலி மீது தன் சகாக்களிடம் குற்றம் சாட்டி வருகிறார்.