ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரன், சண்டக்கோழி, ஆயத எழுத்து, புதிய கீதை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். மலையாள நடிகையான இவர் தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். இவருக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டஸ் என்ற சாப்ட்வேர் இன்ஜினீயருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது. பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான மலையாள திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக இந்த திருமணத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அனில் ஜான் போலீசில் புகார் கூறியிருந்தார். காரணம், அவர் ஏற்கனவே பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவரை முதலில் திருமணம் செய்ததாகவும், ஆனால் பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாகவும், இருந்தாலும் முதல் மனைவி இந்த திருமணத்தில் வந்து பிரச்னை செய்யலாம் என்பதால் பாதுகாப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு மீரா ஜாஸ்மின் மற்றும் அனில் மிட்டல் இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்ய திருவனந்தபுரம் மாநகராட்சியில் மனு செய்து இருந்தனர். ஆனால், திருமண சான்று அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதுப்பற்றி அதிகாரிகள் கூறுகையில், அனில் தனது திருமண பதிவு விண்ணப்பத்தில் இது தனக்கு முதல் திருமணம் என்று கூறியுள்ளார், ஏற்கனவே இவருக்கு திருமணம் நடந்துள்ளதால் பதிவு சான்றிதல் மறுக்கப்பட்டது. மேலும் இரண்டாவது திருமணம் என்றால் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதற்கான சான்றோ அல்லது அவர் இறந்து இருந்தால் அதற்கான இறப்பு சான்றோ திருமண பதிவின் போது இணைக்க வேண்டும், அதையும் அனில் ஜான் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.