ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி, தெலுங்கு படங்களில் வில்லனாக மிரட்டிக்கொண்டிருந்த வித்யூத் ஜம்வாலை, அஜீத் நடித்த பில்லா-2 படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் அப்பட டைரக்டரான சக்ரி டோலட். அந்த படத்தில் வித்யூத்தின் மிரட்டல் பலமாக இருந்ததால், அடுத்தபடியாக தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் கமிட்டானார்.
அந்த படத்தில் ஆரம்பத்தில் வித்யூத்தின் காட்சிகளை அமைதியாக கொண்டு சென்ற முருகதாஸ், கடைசியில் விஜய்யுடன் அவர் மோதும் அதிரடியான சண்டை காட்சியை வைத்து வித்யூத்தை ரசிகர்கள் மத்தியில் அழுத்தமாக பதிய வைத்தார். அதனால் இப்போது ஆக்சன் பிரியர்களை கவர்ந்த வில்லனாகிவிட்டார் வித்யூத் ஜம்வால்.
அதனால் இப்போது அவரை சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்திலும் நடிக்க வைத்துள்ளார் லிங்குசாமி. முந்தைய இரண்டு படங்களையும் விட இந்த படத்தில் வித்யூத்துக்கு இன்னும் அதிரடியான வில்லன் ரோலாம். முக்கியமாக தமிழைப்போலவே, தெலுங்கிலும அவர் பிரபலமான வில்லன் என்பதால் படத்தின் தொடக்கத்தில் இருந்தே சிங்கம் சூர்யாவுடன் அவர் கர்ஜிக்கும் காட்சிகள் தியேட்டர்களையே அலற வைக்கும் என்கிறார்கள்.
ஆக, பில்லா-2வில் அஜீத், துப்பாக்கியில் விஜய், அஞ்சானில் சூர்யா என தமிழின் தற்போதைய மூன்று முன்னணி ஹீரோக்களுடனும் பலப்பரீட்சை பார்த்து விட்டார் இந்தி வில்லன் வித்யூத் ஜம்வால்.