Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"இதய சாக்கடை சுத்தமாக படியுங்கள் - புத்தக திருவிழாவில் இளையராஜா பேச்சு!

02 ஆக, 2014 - 12:38 IST
எழுத்தின் அளவு:

""நம் அனைவரது இதயத்தில் இருக்கும், சாக்கடையை அகற்ற, புத்தகம் படிப்பது ஒன்றே சிறந்த வழி, என, புத்தக திருவிழாவில், இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். ஈரோடு, வ.உ.சி., பூங்காவில், மக்கள் சிந்தனை பேரவை சார்பில், புத்தகத்திருவிழா நேற்று துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.


புத்தக திருவிழாவை துவக்கி வைத்து, இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: ஈரோட்டுக்கு, கடந்த, 1960-68ம் ஆண்டு வரை, பல முறை, என் சகோதரர்களுடன் வந்துள்ளேன. அப்போது, நான் பார்த்த நகருக்கும், இப்போது நீங்கள் பார்க்கும் ஈரோட்டுக்கும், நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்த காலத்தில் டிரம்ஸ், கிடாருடன் சென்னை வந்து, இசையமைத்தோம். தற்போது, ஒரு கம்ப்யூட்டரிலேயே, புரியாத இசையை, தந்து விடுகின்றனர். அந்தளவுக்கு, இசைத்துறையிலும் நவீனம் புகுந்து விட்டது.


"இதயம் ஒரு கோவில் என்ற பாடலுக்கேற்ப, நம் அனைவரது இதயமும், கோவில் தான். அதில் உள்ள சாக்கடைகளை அகற்றினால், கோவிலாக மாறிவிடும். அதற்கு புத்தகங்களை படிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரிடமும், ஒவ்வொரு விதமான அனுபவங்கள் இருக்கும். அதை தெரிந்து கொள்ள தான், படிக்க வேண்டியுள்ளது. அதற்காக புத்தகம் படித்தால் தான், அறிவு வளரும் என்று கூற முடியாது.


திருவள்ளூவர், திருக்குறளை புதிதாக எழுதினார். ஏற்கனவே, தெரிந்ததை அவர் எழுதவில்லை. இந்த உலகமே, நாத மயமானது. இளையராஜா என்ற வார்த்தையை உச்சரித்தால் மட்டுமே, உங்களுக்கு என்னை பற்றிய எண்ணங்கள் தோன்றும். கற்க கசடற என்பதற்கேற்ப, எந்த விஷயத்தையும் முழுமையாக கற்றறிவது அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், துணை மேயர் பழனிசாமி, எஸ்.கே.எம்.மயிலானந்தன், வேளாளர் கல்லூரி தாளாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். புத்தக கண்காட்சி, தினமும், காலை 11 முதல், இரவு, 9.30 மணி வரை செயல்படும். தினமும், மாலை, 6 மணிக்கு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in