கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சமீபகாலமாக படங்களை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது சர்ச்சைகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக படங்கள் திரைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளிவந்து விட்டது என்று சொல்லி கமிஷனர் ஆபீசுக்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் புகார் மனு அளித்து வந்தனர். அதோடு அந்த செய்தியையும் மீடியாக்களில் பரபரப்பாக வெளியிட்டு பப்ளிசிட்டியை தேடிக்கொண்டனர். இன்னும் சிலர் படம் வெளியான இரண்டொரு நாட்களிலேயே திருட்டு விசிடிக்கள் விற்பனைக்கு வந்து விட்டதாக சொல்லியும் புகார் அளித்து வந்தனர்.
ஆனால், தற்போது அப்படி யாரும் புகார் கொடுப்பதில்லை. மாறாக, சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இணைத்து பரபரப்பு கூட்டி வருகின்றனர். இதில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியை மட்டமாக சித்தரித்து தனுஷ் வசனம் பேசி நடித்திருப்பதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கு அப்பட டைரக்டர் வேல்ராஜ் வருத்தம் தெரிவித்தபோதும், அது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகப்போவதாக அந்த பள்ளி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனுஷ் புகைப்பிடிப்பது போன்று சென்னை நகரமெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து புகையிலை கட்டுப்பாட்டு வாரியம் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தது. அதையடுத்து அந்த போஸ்டர்களை உடனடியாக நீக்குமாறு அப்படக்குழுவுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதனால் தற்போது அந்த போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்து அகற்றியுள்ளனர். பல இடங்களில் அதே இடத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.