கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
'கோலிசோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் தற்போது விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். விக்ரமுடன் முதன் முதலாக சமந்தா இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு முதலில் 'இடம் மாறி இறங்கியவன்' என்று தலைப்பு வைக்கப்பட்டது. பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை... அந்தத் தலைப்பை மாற்றிவிட்டு 'பத்து எண்றதுக்குள்ளே' என்ற தலைப்பை வைத்தனர். ஆனாலும், இந்த தலைப்பை அப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டனோ தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸோ அதிகாரபூர்வமாக வெளியே சொல்லவில்லை.
அதே நேரம், படக்குழுவினர் மட்டும் தற்போது இந்த தலைப்பை பயன்படுத்தி வருகின்றனர். அஜித் படத்தின் தலைப்பு மட்டும்தான் ரகசியமாக வைக்கப்படும். அவரது பாணியில் தலைப்பை ரகசியமாக வைக்க ஆரம்பித்துவிட்டாரா விக்ரம்? என்று விக்ரம் தரப்பில் விசாரித்தபோது, தலைப்பு விஷயத்தில் அவர் தலையிடவே இல்லை
என்ற தகவல் கிடைத்தது. அதுமட்டுமல்ல, கதைக்கு பொருத்தமான தலைப்பை வையுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டாராம் விக்ரம்.
தலைப்பு விஷயத்தில் விக்ரம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதும், பொறுப்பை தன்னிடமே ஒப்படைத்ததும் இயக்குநர் விஜய்மில்டனை தீவிரமாக யோசிக்க வைத்திருக்கிறது. அதாவது, பத்து எண்றதுக்குள்ளே தலைப்பை மாற்றிவிட்டு வேறு தலைப்பை வைக்கலாமா என அவரை மறு பரிசீலனை செய்ய வைத்துவிட்டதாம்.
எனவே, இதைவிட சிறப்பான தலைப்பை தேட ஆரம்பித்துவிட்டாராம் விஜய் மில்டன்.
படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ளே அறிவிச்சா சரி..!