ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கோலிசோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் தற்போது விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். விக்ரமுடன் முதன் முதலாக சமந்தா இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு முதலில் 'இடம் மாறி இறங்கியவன்' என்று தலைப்பு வைக்கப்பட்டது. பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை... அந்தத் தலைப்பை மாற்றிவிட்டு 'பத்து எண்றதுக்குள்ளே' என்ற தலைப்பை வைத்தனர். ஆனாலும், இந்த தலைப்பை அப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டனோ தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸோ அதிகாரபூர்வமாக வெளியே சொல்லவில்லை.
அதே நேரம், படக்குழுவினர் மட்டும் தற்போது இந்த தலைப்பை பயன்படுத்தி வருகின்றனர். அஜித் படத்தின் தலைப்பு மட்டும்தான் ரகசியமாக வைக்கப்படும். அவரது பாணியில் தலைப்பை ரகசியமாக வைக்க ஆரம்பித்துவிட்டாரா விக்ரம்? என்று விக்ரம் தரப்பில் விசாரித்தபோது, தலைப்பு விஷயத்தில் அவர் தலையிடவே இல்லை
என்ற தகவல் கிடைத்தது. அதுமட்டுமல்ல, கதைக்கு பொருத்தமான தலைப்பை வையுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டாராம் விக்ரம்.
தலைப்பு விஷயத்தில் விக்ரம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதும், பொறுப்பை தன்னிடமே ஒப்படைத்ததும் இயக்குநர் விஜய்மில்டனை தீவிரமாக யோசிக்க வைத்திருக்கிறது. அதாவது, பத்து எண்றதுக்குள்ளே தலைப்பை மாற்றிவிட்டு வேறு தலைப்பை வைக்கலாமா என அவரை மறு பரிசீலனை செய்ய வைத்துவிட்டதாம்.
எனவே, இதைவிட சிறப்பான தலைப்பை தேட ஆரம்பித்துவிட்டாராம் விஜய் மில்டன்.
படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ளே அறிவிச்சா சரி..!