கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ராமேஸ்வரம் வரவர பிசியான படப்பிடிப்பு ஸ்தலமாக உருவாகி வருகிறது. கடற்கரை சம்மந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் எடுக்க முடியாதபடி பல்வேறு பிரச்சனைகள், தடங்கல்கள் இருப்பதால் பலரும் வேறு ஊர் கடற்கரைகளை தேடிச் செல்கிறார்கள். அப்படி செல்லும் பலருக்கும் ராமேஸ்வரம் கடற்கரை சிறந்த தேர்வாக இருக்கிறது. மாயி படத்தை இயக்கிய சூர்யபிரகாஷ் தற்போது வருஷநாடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பல காட்சிகளை ராமேஸ்வரம் கடற்கரையில்தான் படமாக்கிவிட்டு வந்தார். அப்படத்தை அடுத்து விமல் நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் படப்பிடிப்பும் ராமேஸ்வரத்தில் நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து ரீமேக் படங்களை இயக்கியதால் ரீமேக் டைரக்டர் என்று பெயர் எடுத்த கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். கடைசியாய் அவர் இயக்கிய சேட்டை தோல்வியடைந்த காரணத்தினால், தன்னுடைய கதையை படமாக எடுத்து வருகிறார்.
'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது!. விமல் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் செகன்ட் ஹீரோ ரேன்ஜுக்கு வெயிட்டான கேரக்டரில் சூரி நடிக்கிறார். கதாநாயகியாக, பிரியா ஆனந்த், விஷாகா சிங் இரவரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் நடந்து வந்தது. அங்கு பிரியா ஆனந்த், விஷாகா சிங் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியிருக்கிறார் கண்ணன். ராமேஸ்வரத்தில் நடைபெற்று வந்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் முடிவடைந்து விட்டதாம்! மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை முத்தையா ஏற்றிருக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.